» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : மதுரையில் பரபரப்பு
சனி 25, செப்டம்பர் 2021 4:42:56 PM (IST)
மதுரையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஜெய்ஹிந்து புரத்தில் வசித்து வரும் துரைராஜ் என்பவர் அந்த பகுதியில் கேபிள் கேபிள் ஆபரேட்டராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் கேபிள் ஆப்பரேட் டர் உரிமம் தரும்படி கடந்த சில மாதங்களாக கேட் டுள்ளார். இதற்கு துரைராஜ் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த், நான் 4 கொலைகளுக்கு மேல் செய்துள்ளேன்.
எனவே என்னிடம் கேபிள் ஆபரேட்டர் உரிமத்தை தந்துவிடு என்று மிரட்டிய தாக தெரிகிறது. இந்த நிலையில் ஆனந்த் நேற்று மாலை வீட்டிற்கு வந்து துரைராஜா மிரட்டி விட்டு சென்றுள்ளார்.அதன் பிறகு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த், துரைராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றதாக தெரிகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து ஜெய்ஹிந்து புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.