» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தென்காசி அமமுக நிர்வாகிகள்!!

வெள்ளி 24, செப்டம்பர் 2021 10:17:03 AM (IST)



தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் அமமுக செயலாளரும், தற்போதைய அமைப்புச் செயலாளருமான பொய்கை மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அமமுக அமைப்பு செயலாளர் பொய்கை சோ மாரியப்பன், அமமுக மாவட்ட  அவைத்தலைவர் பெருமையா பாண்டியன், பொன்னுசாமி கடையநல்லூர் நகர செயலாளர்ஜமாலூதீன், செங்கோட்டை நகர செயலாளர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமசாமி ஆகியோர் அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர் பி உதயகுமார், தென்காசி வடக்கு மாவட்ட. அதிமுக  செயலாளர் செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, தென்காசி தெற்கு மாவட்ட  செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory