» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல்: நாளை வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 11:44:05 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கள் நாளை (15ம் தேதி) தொடங்குகிறது.

தமிழகத்தில் தென்காசி மாவட்டம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் அக்.6 மற்றும் 9ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை (15ம் தேதி ) வேட்பு மனுத்தாக்கல் துவங்குகிறது. 22ம் தேதி வேட்பு மனுத்தாக்கல்செய்ய கடைசி நாளாகும். 23ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 25ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும்.

தென்காசி மாவட்டத்தில் பாப்பாக்குடி, ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர்,மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு அக்.6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு அக்.9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்.12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory