» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

திங்கள் 13, செப்டம்பர் 2021 3:11:33 PM (IST)

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், விதி 110ன் கீழ் முதல்வரின் அறிவிப்புகள், மசோதாக்கள் நிறைவேற்றம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.  அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச் செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பேரவைத் தலைவர் அறிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory