» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவர் தனுஷ் தற்கொலைக்கு தமிழக அரசுதான் பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திங்கள் 13, செப்டம்பர் 2021 11:33:49 AM (IST)

மாணவர் தனுஷ் தற்கொலைக்கு தமிழக அரசுதான் பொறுப்பு என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக சட்டப்பேரவை இன்று 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் கூடியது. சட்டப்பேரவை கூடியதும் நீட் தேர்வு விவகாரம் அவையில் எதிரொலித்தது.  குறிப்பாக நேற்று அதிகாலை நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட  மாணவர் தனுஷ்  தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி  அதிமுக  எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-  நீட் தேர்வு அச்சம் காரணமாக   தனுஷ் என்ற மாணவர் தற்கொலைக்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு. திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு செய்யப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருந்தார். 

நீட் தேர்வு வேண்டாம் என்று அதிமுக அரசு தீர்மானம் கொண்டு வந்த போது எதிர்த்த திமுக தற்போது தீர்மானம் கொண்டு வருகிறது. நீட் தேர்வு பிரச்சினையில் திமுக அரசு தெளிவான முடிவு எடுத்து சொல்லவில்லை. நீட் விவகாரத்தில் அரசின் நடவடிக்கையால் மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர்” என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory