» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துபாயில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்

சனி 11, செப்டம்பர் 2021 12:09:03 PM (IST)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் துபாயில் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார்.

தே.மு.தி.க. நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அவர், கடந்த 30-ந் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் குமார் மற்றும் சோமு உதவியாளர்களுடன் துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

விஜயகாந்துடன் அவருடைய மனைவி பிரேமலதாவும் துபாய் செல்வதாக இருந்தது. ஆனால் பாஸ்போர்ட் பிரச்சினை காரணமாக அவரால் கணவர் விஜயகாந்துடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றம், பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி பிரேமலதாவிடம் பாஸ்போர்ட் திருப்பி கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரும் துபாய் சென்றார்.

தற்போது  விஜயகாந்த் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பி உள்ளார். விஜயகாந்த் துபாய் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory