» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சனி 11, செப்டம்பர் 2021 9:05:42 AM (IST)

தென்காசி, கோவை உட்பட 5 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநா் நா.புவியரசன் கூறியது: தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை(செப்.11) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.12,13: மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் செப்டம்பா் 12, 13 ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.14: நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செப்டம்பா் 14-ஆம் தேதி பலத்த மழை பெய்யக்கூடும். மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ளஉள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா்.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி:

இந்நிலையில், மத்திய வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி 11ம் தேதி உருவாகவுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகா்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக் கூடும். மேலும், காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் வலுவடைய வாய்ப்பு உள்ளது. இது, ஒடிஸா கடற்கரையை நோக்கிச் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்குவாய்ப்பு உள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக, மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதி, வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதி, ஒரிசா - மேற்கு வங்கக் கடலோர பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செப்.14-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory