» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை: டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவிப்பு!
சனி 31, ஜூலை 2021 10:11:41 AM (IST)
தமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாயம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
* காவலர்கள் தங்கள் உடல்நலனை பேணிக்காக்க எதுவாகவும், காவலர்கள் தங்கள் குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒருநாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.
* வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகை நேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.
* காவலர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்
* தமிழக காவல்துறையின் சார்பாக பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்தி மாவட்ட/ மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
* மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்த கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டிஜிபி சைலேந்திரபாபுவின் இந்த அறிவிப்பு காவலர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
adminJul 31, 2021 - 10:26:58 AM | Posted IP 103.1*****