» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ரூ.17ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் திட்டங்கள்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்!
செவ்வாய் 20, ஜூலை 2021 12:03:30 PM (IST)
தமிழகத்தில் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான 33 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகின.
சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் காலை 11 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளா் முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கா்னி உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக, கேப்பிட்டல் லாண்ட், அதானி, ஜே.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சியின் வழியே 14 புதிய தொழில் திட்டங்களுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.