» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை அருகே நர்ஸ் வெட்டிக்கொலை; குடும்ப தகராறில் மருமகன் வெறிச்செயல்

ஞாயிறு 18, ஜூலை 2021 10:24:29 AM (IST)

மூலைக்கரைப்பட்டியில் குடும்ப தகராறில் அரசு மருத்துவமனை நர்ஸை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (50). இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளராக வேலை செய்து வந்தார். இவருடைய கணவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி, மூலைக்கரைப்பட்டி கல்லத்தியில் கணவர் அபிமன்யுவுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ராஜலட்சுமிக்கும், அவருடைய மருமகன் அபிமன்யுவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. நேற்று இரவில் அபிமன்யு தனது மாமியாரின் வீட்டுக்கு சென்று மீண்டும் தகராறு செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த அபிமன்யு, ராஜலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து, அபிமன்யுவை கைது செய்தனர். மூலைக்கரைப்பட்டியில் குடும்ப தகராறில் மாமியாரை மருமகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory