» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஜிட்டல் பேனரில் வீச்சரிவாளுடன் போஸ்: ராணுவ வீரர் உள்பட 2 பேர் மீது வழக்கு

சனி 17, ஜூலை 2021 4:46:58 PM (IST)

சங்கரன்கோவில் அருகே டிஜிட்டல் பேனரில் வீச்சரிவாளுடன் படம் இடம்பெற்றது தொடர்பாக ராணுவவீரர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சங்கரன்கோவில் அருகே வடமலாபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (31). ராணுவ வீரரான இவர் அருணாசலபிரதேச மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் சுரேஷின் உறவினரின் திருமணத்தை முன்னிட்டு, சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதில் சுரேஷ் வீச்சரிவாளுடன் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதையடுத்து சுரேஷ் மற்றும் அச்சக உரிமையாளரான சங்கர நாராயணன் ஆகியோர் மீது சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory