» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அ.தி.மு.க.வுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன்: முன்னாள் சபாநாயகர் தனபால் பேட்டி
வெள்ளி 16, ஜூலை 2021 12:49:54 PM (IST)
தான் மாற்றுக்கட்சிக்கு செல்ல இருப்பதாக வந்த தகவல் வதந்தி என்றும், அ.தி.மு.க.வுக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன் என்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் எம்.எல்.ஏ. கூறினார்.
முன்னாள் சபாநாயகரும், அவினாசி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தனபால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் இருந்து நான் மாற்று கட்சிக்கு செல்ல இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வந்த வதந்தியை மறுக்கிறேன். வன்மையாக கண்டிக்கிறேன். 1972-ம் ஆண்டு மாணவ பருவத்திலிருந்து அ.தி.மு.க.வில் இருக்கிறேன். 45 ஆண்டுகால என் வரலாறு தெரியாத யாரோ வாட்ஸ்-அப்பில் தவறான தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த சூழ்நிலையிலும் எந்த மாற்றத்தையும் விரும்பாதவன் நான். எந்த பதவியையும் பெரிதாக விரும்பியது இல்லை. இந்த இயக்கம் என்னை 7 முறை சட்ட மன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் மற்றும் துணை சபாநாயகர், சபாநாயகராகவும் நியமித்துள்ளது. இந்த இயக்கம் என்னை நன்றாக வைத்திருக்கிறது. நான் சார்ந்த இயக்கம் என்னை பெருமைபடுத்தியிருக்கிறது. ஆகவே இந்த இயக்கத்திற்கு நான் விசுவாசியாக இருப்பேன். இது போன்ற வதந்திகளுக்கு எனது வாழ்க்கையில் இடமே இல்லை. இனிமேல் இதுபோன்ற வதந்திகள் வராது என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழன்Jul 16, 2021 - 03:35:27 PM | Posted IP 162.1*****