» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இன்று சர்வதேச பாம்புகள் தினம்: அழிவிலிருந்து பாம்புகளை பாதுகாக்க ஆர்வலர்கள் கோரிக்கை!

வெள்ளி 16, ஜூலை 2021 11:09:25 AM (IST)



பாம்பு ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இன்று ஜுலை 16 சர்வதேச உலக பாம்புகள் தினத்தை  கொண்டாடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த பாம்புகள் (ஊர்வன) பாதுகாவலர் சேக் உசேன் இதுவரை 5000 மேற்பட்ட பாம்புகளை உயிருடன் மீட்டுள்ளார். வனத்துறை தீயணைப்பு மீட்பு துறை ஊழியர்களுக்கு பாம்புகளை கையாளும் முறையும் எவ்வாறு மீட்பதும் என்றும் பயிற்சி அளித்து வருகிறார்.பள்ளி கல்லூரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பாம்புகள் மற்றும் பாம்புகடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

ராஜநாகம், மலைப்பாம்பு நல்லபாம்பு போன்ற கொடிய நஞ்சுடைய பாம்புகளை இவர் லாவகமாக பிடிப்பதில் கை தேர்ந்தவர். கடந்த சில மாதங்களாக  முகநூல் வாட்சப்பில் இவர் கடையநல்லூர்  மளிகை கடையில் பாம்பு பிடிக்கும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்தது. அவரை சந்தித்து பாம்புகளை பற்றி கேட்டபோது கடையநல்லூர் சேக் உசேன் கூறியதாவது:- 

உலகில் 3000 கும் மேற்பட்ட பாம்பினங்களும், இந்தியாவில் 280 மேற்பட்ட பாம்பினங்களும் உள்ளது. இதில் 280 பாம்பினங்களில் 70 வகையான பாம்புகள் நஞ்சுடைய பாம்புகளாகும். இந்த 70 வகையான பாம்புகளில் இந்தியாவில்  பெரும்பான்மை யாக  நான்கு வகையான பாம்புகள் உள்ளது. அதாவது நல்லபாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டைவிரியன் பாம்புகள் மட்டும் மனித குடியிருப்பு பகுதிகளில் வாழக்கூடிய நஞ்சுடைய பாம்புகளாகும்.

நல்லபாம்புகளின் உடலில் காணப்படும் சிறப்பான உறுப்பு தலையில் இருக்கும் ஒரு விரியக் கூடிய தசை ஆகும். இது எதிரியை அச்சுறுத்தவே பாம்புகள் பயன்படுத்தும். இதனை படம் எடுத்தல் என்பர். இப்பாம்புகள் மஞ்சள் கலந்த வெள்ளை, கரும்பழுப்பு மற்றும் வெளிர்சாம்பல் நிறங்களில் இருக்கின்றன. 

இந்தவகை பாம்புகள் தனது அசைந்தியங்கும் தாடைகளின் உதவியுடன் இரையை முழுதாக விழுங்கும். இவை பல்லி, சிறு பாம்புகள், பறவைகள் மற்றும் சிறு பாலூட்டி வகைகளை உணவாக உட்கொள்கின்றன.இப்பாம்பு கற்களுக்கு அடியில், இடிபாடுகளுக்கிடையில் வாழக்கூடிய தன்மையுடையது. சில சமயம் வீட்டுக்குள்ளும் புகுந்து விடும். இந்த பாம்புகள் கடித்தால் மனிதனுக்கு இறப்பு நேரிடும். இப்பாம்பின் நச்சு மனிதனின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கண்ணாடி விரியன் இது பெரும் நான்கு நஞ்சுடைய பாம்புகளில் ஒன்று. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய இவை நான்கே காரணம்.தடித்த உடல்; கழுத்தைவிடப் பெரிய முக்கோண-வடிவ தலை.

தலையின் மேற்பகுதியிலுள்ள செதில்கள் சிறியனவாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன. பெரிய மூக்குத்துளை உடையதாகவும், கண்மணி செங்குத்தாகவும் உள்ளன.பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலுடையது.விரியன் பாம்பின் நஞ்சு குருதிச் சிதைப்பானாகும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர். இது மிகவும் கொடிய நஞ்சாகும் ஆகும். இந்த வகை பாம்புகள் கடித்தால் ஆறு மணி நேரத்தில் உயிரிழக்க நேரிடும்.

இந்த வகை பாம்புகள் கட்டு விரியன், எண்ணெய் விரியன், எட்டடி விரியன், பனை விரியன் ஆகிய பெயர்களாலும் அழைக்கப் படுகிறது.பொதுவாக வயல்களிலும் எலி வளை, கரையான் புற்று, கற்குவியல் போன்ற இடங்களில் இவை காணப்படுகின்றன. மற்றும் நீர்நிலைகளுக்கு அருகிலும் இவை காணப்படுகின்றன.இது இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் பாம்பு. ஆண் பாம்புகள் தங்கள் எல்லைக்குள் மற்றவர்கள் நுழைவதை விரும்பாதவை. கட்டுவிரியன் மற்ற பாம்புகளையும் எலிகளையும் இரையாகக் கொள்கிறது. இதன் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் பாதிக்ககூடியது. தீண்டியவுடன் தசைகளைச் செயலற்றதாக்கி விடும். பாம்பு கடித்தவுடன் ஏறத்தாழ 6-8 மணிநேரத்திற்குள் சாவு ஏற்படலாம். மூச்சு மண்டலம் செயலிழப்பதால் பொதுவாக உயிரிழப்பு ஏற்படுகிறது.

சுருட்டை விரியன் அளவில் சிறியதாக இருந்தாலும் இதன் நஞ்சு சிவப்பணுக்களை அழிக்கும் குருதி நச்சு வகையைச் சேர்ந்தது.

இந்த பாம்புகளை யாராவது தொல்லை செய்தால் உடன் தாக்கக்கூடியது பெரும்பாலான இறப்புகளுக்கு சுருட்டை விரியன்களும் காரணமாகின்றன. எலிகள், பல்லி, ஓணான்கள், தவளைகள், தேள்கள் மற்றும் பூச்சிகள் இந்த வகை பாம்புகள் உணவாக உட்கொள்ளும். பாம்புகள் பொதுவாக முட்டையிட்டு குஞ்சு பொரிக்காமல் 4 - 8 வரையில் குட்டிகளை ஈனும். ஈனும் காலம் - ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை.

தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில்  மாஞ்சோலை மலைக்காடுகளிலும், தென்காசி மாவட்டமா  புளியரை, மேக்கரை, கடையநல்லூர், புளியங்குடி, வனபகுதியிலும் அதிகமாக  காணப்படுகின்றன.பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வசிக்கும் இவை, நீர் நிறைந்த பகுதிகளை ஒட்டியே தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. பெருகிவரும் காடுகளை ஆக்கிரமிக்கும் முறைகளால் இவ்வினம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. 

10 அடி முதல் 13 அடி நீளம் வரை வளருகின்றன. 6 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கின்றன. இவற்றில் தென் தாய்லாந்து நாட்டில் உள்ள நக்கோன்-சி-தம்மாரத் மலையில் பிடிபட்ட ஒரு பாம்பு 18.5 அடி நீளம் இருந்தது. இவை பெரும்பாலும் மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது பாசியின் பச்சை நிறத்திலான உடலில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தினாலான பட்டைகளுடன் காணப்படுகின்றன இப்பாம்புகள் மிகப்பெரிய கண்களுடன் வட்டவடிவ கண்பார்வை கொண்டவையாகும். பாம்புகளில் இச்செதில்களின் எண்ணிக்கையும் மற்றும் வடிவமும் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்தை வேறுபடுத்திக் கண்டறிய உதவுகிறது. இந்த நிற அமைப்பு இளம் பருவத்தில் மிகவும் சற்று வெளிச்சமாக காணப்படும். ஆண் இனம் பெண்ணை விட அதிக நீளமாகவும், தடிமனாகவும் இருக்கின்றன. இவற்றின் வாழ்நாள் 20 ஆண்டுகள்.


ஒருவரை பாம்பு கடித்துவிட்டால் அவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதுகூட பலருக்கும் தெரிவதில்லை என்பதே இங்கே யதார்த்தம். `பாம்பு கடித்துவிட்டது’ என்றதும் பலருக்கும் திரைப்படங்களில் பார்த்த காட்சிகள்தான் நினைவுக்கு வரும். பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்தே விஷத்தை உறிஞ்சி எடுத்துவிடுவார்கள். நம் ஹீரோக்கள். வேடிக்கை பார்ப்பவர்களில் சிலர், பாம்புக்கடி குறித்தப் பல தவறான நம்பிக்கைகள் மக்களிடம் இருக்கின்றன. பாம்பு கடித்த இடத்தில் வாய்வைத்து உறிவது, நெருப்புவைப்பது, கத்தியால் கீறிவிடுவது இவை எல்லாமே தவறான முதலுதவிகள். பாம்பு கடித்த இடத்தில் மஞ்சள் போன்ற பொருள்களைப் பூசக் கூடாது. பாம்புக்கடிக்கு ஆளானவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவரை நடக்கவைத்து அழைத்து செல்லக் கூடாது. படுக்க வைத்தோ, உட்கார வைத்தோ அழைத்துச் செல்ல வேண்டும்.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. பெரும்பான்மையான பாம்புகள் விஷமற்றவையே. இந்தியாவில் உள்ள நச்சுப் பாம்புகளில் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கரு நாகம், ராஜ நாகம் போன்ற பாம்புகள்தான் ஆபத்தானவை.  

கடித்த பாம்புகளுக்கேற்ப விஷக்கடிக்கு சிகிச்சை அளிக்கப்படும். விஷத்தில் இரண்டு வகை. ஒன்று, நியூரோடாக்ஸின் என்ற விஷம். இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மிகவும் ஆபத்தானது. ராஜநாகம், நல்ல பாம்பு போன்ற பாம்புகள் கடிப்பதால் இந்த வகை விஷம் உடலில் ஏறும். அரை மணி நேரத்தில் விஷமுறிவு மருந்து கொடுத்துவிட்டால், கடிபட்டவரின் உயிரைக் காப்பாற்றிவிடலாம். மற்றொன்று, ஹீமோடாக்ஸின் என்ற விஷம். இது, ரத்த செல்களைப் பாதித்து ரத்த உறைதலைத் தடுக்கும் அல்லது ரத்த சிவப்பணுக்களை அழித்துவிடும் என சேக் உசேன் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory