» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

செவ்வாய் 22, ஜூன் 2021 9:05:04 PM (IST)

ராமநாதபுரம் அருகே வீட்டிற்கு வராவிட்டால் தேர்ச்சி அடையவிட மாட்டேன் என மாணவிகளை மிரட்டிய அறிவியல் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். 

தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியர்கள், உடல்கல்வி ஆசிரியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹபீப் என்பவர் சிக்கியுள்ளார். ஆசிரியர் ஹபீப் மாணவிகளை மிரட்டி பணிய வைக்க முயன்ற ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த ஆடியோவை ஆதாரமாக வைத்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ஹபீப்பை முதுகுளத்தூர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory