» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
45 வயதை கடந்தவர்கள் 2 வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
வியாழன் 8, ஏப்ரல் 2021 3:37:15 PM (IST)
தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

எனவே தொற்று வெகுவேகமாக பரவி, தொற்று எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. கரோனா பரவலுக்கு பிரசார கூட்டங்களும் காரணமாய் அமைந்தன. எனவே மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்று மக்கள் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்தது. இந்நிலையில் நேற்று தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமைச்செயலகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக, பல்வேறு அரசு துறை செயலாளர்கள், போலீஸ் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, தொழில்துறை முதன்மை செயலாளர் என்.முருகானந்தம்,பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன், பொதுத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் பி.உமாநாத், பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் டி.ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
பிரதமர் இன்று மேற்கொள்ளும் ஆலோசனையில், தமிழக அரசின் சார்பில் என்னென்ன கருத்துகளை முன்வைக்க வேண்டும்? என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்படி தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடவிநயினார் அணை ஷட்டரை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
புதன் 21, ஏப்ரல் 2021 8:56:50 AM (IST)

திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுடன் தினசரி 3 காட்சிகள்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 5:46:03 PM (IST)

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவிலான பொதுத் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 5:10:45 PM (IST)

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 4:47:25 PM (IST)

அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 3:34:03 PM (IST)

யோகி பாபு நடித்த மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 3:26:48 PM (IST)
