» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் திட்டத்தை கைவிட வேண்டும் : மத்திய அமைச்சரிடம் மனு
திங்கள் 8, மார்ச் 2021 4:53:28 PM (IST)
குமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்கும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அமித் ஷாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நாகா்கோவிலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அளித்த மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்துக்குடி துறைமுக கழகத்தின் மூலம் சரக்குப் பெட்டகம் அமைய இருப்பதை உடனே திரும்பப் பெற வேண்டும். மீனவா்களுக்கு எதிராக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவா் எம்.சேவியா் மனோகரன், அதிமுக மீனவா் அணிச் செயலா் ரமேஷ், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேர ஊரடங்கு தொடங்கியது: முக்கிய சாலைகள் வெறிச்சோடியது
புதன் 21, ஏப்ரல் 2021 10:35:50 AM (IST)

அடவிநயினார் அணை ஷட்டரை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
புதன் 21, ஏப்ரல் 2021 8:56:50 AM (IST)

திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுடன் தினசரி 3 காட்சிகள்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 5:46:03 PM (IST)

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவிலான பொதுத் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 5:10:45 PM (IST)

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 4:47:25 PM (IST)

அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 3:34:03 PM (IST)
