» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:37:26 PM (IST)
கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம் என்று தடுப்பூசி எடுத்துக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை ராஜீவ் கராந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். தமிழகத்தில் 907 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதால் 908 ஆவது நபராக, ஒரு மருத்துவராக மற்றும் ஐஎம்ஏ உறுப்பினராக தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளேன்.
தடுப்பூசியை எடுத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம். தடுப்பூசி எடுத்துக்கொண்டு கரோனா தொற்று பாதிப்பில் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்ட அமைச்சர், தடுப்பூசி தொடர்பாக எந்தவொரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரு இளைஞர்களை கொலை செய்தவர்களுக்கு கடும் தண்டனை : ரா.சரத்குமார் வலியுறுத்தல்
சனி 10, ஏப்ரல் 2021 5:41:02 PM (IST)

விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதே மத்திய பாஜக அரசின் வாடிக்கை : வைகோ கடும் விமர்சனம்!
சனி 10, ஏப்ரல் 2021 5:27:02 PM (IST)

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்.14 வரை கோடை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சனி 10, ஏப்ரல் 2021 5:22:46 PM (IST)

தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
சனி 10, ஏப்ரல் 2021 12:22:40 PM (IST)

யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் முடிதிருத்துவோர் சங்கம் புகார்!
சனி 10, ஏப்ரல் 2021 10:28:47 AM (IST)

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை : இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் மீது நடவடிக்கை
சனி 10, ஏப்ரல் 2021 8:45:58 AM (IST)
