» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:33:11 PM (IST)
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பேரவைத் துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை , வரும் ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரு இளைஞர்களை கொலை செய்தவர்களுக்கு கடும் தண்டனை : ரா.சரத்குமார் வலியுறுத்தல்
சனி 10, ஏப்ரல் 2021 5:41:02 PM (IST)

விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதே மத்திய பாஜக அரசின் வாடிக்கை : வைகோ கடும் விமர்சனம்!
சனி 10, ஏப்ரல் 2021 5:27:02 PM (IST)

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்.14 வரை கோடை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சனி 10, ஏப்ரல் 2021 5:22:46 PM (IST)

தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
சனி 10, ஏப்ரல் 2021 12:22:40 PM (IST)

யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் முடிதிருத்துவோர் சங்கம் புகார்!
சனி 10, ஏப்ரல் 2021 10:28:47 AM (IST)

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை : இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் மீது நடவடிக்கை
சனி 10, ஏப்ரல் 2021 8:45:58 AM (IST)
