» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்
வெள்ளி 15, ஜனவரி 2021 6:46:19 PM (IST)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகனின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஞானதேசிகன் மறைவையொட்டி 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். துக்கம் அனுசரிக்கும் விதமாக கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ஞானதேசிகன்மறைவுக்கு ஏராளமான கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் "த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் கொண்டவர் ஞானதேசிகன். ஞானதேசிகனை பிரிந்து வாடும் உற்றார், உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கே.எஸ்.அழகிரி:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் முன்னாள் உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன் மறைவு செய்தியால் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த ஞானதேசிகன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழிசை செளந்தரராஜன்:
யாருடைய மனமும் புண்படாமல் பேசும் சிறந்த பண்பாளர் ஞானதேசிகன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஞானதேசிகன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இயக்கங்களின் எல்லைகளைத் தாண்டி நட்பு பாராட்டியவர் தற்போது இல்லை என்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்:
தமிழக அரசியலில் அனைத்துக் கட்சியினரிடமும் நட்பு பாராட்டியவர் ஞானதேசிகன் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.அரசியலில் பதவிக்கு ஆசைப்படாதவர். கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பது எப்படி? என்பதற்கு சிறந்த முன்னுதாரனமாக திகழ்ந்தவர் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
கே.பாலகிருஷ்ணன்:
பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர் பி.எஸ்.ஞானதேசிகன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியல் வேறுபாடுகளை கடந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் நெருக்கத்தோடு பழகும் பண்பு கொண்ட ஞானதேசிகன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் சார்பில் இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ல் இடைத்தேர்தல் : சுநீல் அரோரா அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:39:20 PM (IST)

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் : மார்ச் 12 ல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:24:02 PM (IST)

மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:03:10 PM (IST)

மதுரை -திப்ருகார் இடையே முன்பதிவுடன் கூடிய ஒரு வழி சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:59:51 PM (IST)

போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:56:51 PM (IST)

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:21:07 PM (IST)
