» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் வாலிபர் மீது ஆசிட் வீசிய கள்ளக்காதலி கைது
செவ்வாய் 29, டிசம்பர் 2020 8:59:32 AM (IST)
களியக்காவிளை அருகே வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் வாலிபர் மீது திராவகம் வீசிய கள்ளக்காதலியை போலீசார் கைது செய்து விசராணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பளுகல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மேல்பாலை, நிலவானிவிளையை சேர்ந்தவர் ஷிபு (39), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை ேசர்ந்த சுந்தர பாய் (40) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. சுந்தரபாய்க்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். எனவே ஷிபுவை அவரது பெற்றோர் கண்டித்து வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பளுகல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மேல்பாலை, நிலவானிவிளையை சேர்ந்தவர் ஷிபு (39), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை ேசர்ந்த சுந்தர பாய் (40) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. சுந்தரபாய்க்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். எனவே ஷிபுவை அவரது பெற்றோர் கண்டித்து வந்தனர்.
மேலும், அவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து திருமண நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுந்தர பாய் தகராறில் ஈடுபட்டார். எனவே அவரை சமாதானப்படுத்த ஷிபுவும் அவரது தாயாரும் சுந்தரபாயின் வீட்டிற்கு சென்றனர். அப்போது ‘திருமணம் ஆகிவிட்டால் நீ என்னை மறந்து விடுவாய்’ என சுந்தரபாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுந்தரபாய் ரப்பர் சீட்டுக்கு உறைய வைக்கும் திராவகத்தை ஷிபுவின் முகத்தில் வீசினார்.
இதில் அவரது கண் மற்றும் முக பகுதிகள் வெந்தது. இதனால் ஷிபு வலியால் துடித்தார். ஆனால், ஆத்திரம் தீராத சுந்தரபாய் தனது மகன் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதை தடுக்க முயன்ற தாயாருக்கும் சரமாரியாக அடி விழுந்தது. தொடர்ந்து ஷிபுவும் தாயாரும் அங்கிருந்து தப்பி ஓடினர். படுகாயமடைந்த இருவரும் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் ஷிபுவின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சுந்தரபாய் மற்றும் அவரது 19 வயது மகன் உள்பட 4 பேர் மீது பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சுந்தர பாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் கரோனா தாக்கம் அதிகரிப்பு: 10 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றம்
செவ்வாய் 9, மார்ச் 2021 8:46:48 AM (IST)

லாரி-கார் மோதல்: தமிழர் விடுதலை களம் கட்சி நிர்வாகிகள் 2 பேர் பலி
செவ்வாய் 9, மார்ச் 2021 8:43:45 AM (IST)

மொபட் மீது லோடு ஆட்டோ மோதல்: மதபோதகர் - மனைவி பலி; பேத்தி படுகாயம்
செவ்வாய் 9, மார்ச் 2021 8:37:35 AM (IST)

திமுக கூட்டணியில் சமகவுக்கு சீட் உண்டா? தொண்டர்கள் எதிர்பார்ப்பு....
திங்கள் 8, மார்ச் 2021 8:49:40 PM (IST)

வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!
திங்கள் 8, மார்ச் 2021 5:28:37 PM (IST)

திமுக கூட்டணிக்கு கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு
திங்கள் 8, மார்ச் 2021 4:56:02 PM (IST)
