» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புயல் எச்சரிக்கை தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை : போலீஸ் பாதுகாப்பு
புதன் 2, டிசம்பர் 2020 4:57:23 PM (IST)
புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் அடுத்த 3 நாட்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றங்கரைகளில் பதாகைகள் வைத்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டு வருகிறது.
புரெவி புயல் தமிழகத்தின் பாம்பன் மற்றும் குமரி கடல் பகுதிக்கு இடையே கரையை கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது இதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் தயார் செய்யும் பணி பேரிடர் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வதற்கான ஏற்பாடுகள் போன்றவை செய்யப்பட்டு வருகிறது
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் வரை பயணிக்கும் தாமிரபரணி நதியில் அதி கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய நீர்வள அமைச்சகம் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது இதன் காரணமாக புரெவி புயல் மற்றும் கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாமிரபரணி நதிக்கரையில் அடுத்த 3 நாட்களுக்கு பொதுமக்கள் குளிப்பதற்கும் ஆற்றங்கரையை வேடிக்கை பார்ப்பதற்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்
இந்த நிலையில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஆற்றங்கரை படித்துறைகளில் எச்சரிக்கை பலகைகள் மூலம் பொதுமக்களுக்கு ஆற்றின் வெள்ளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கனமழை பெய்யத் தொடங்கும் நிலையில் தாமிரபரணி நதிக்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் ஆற்றங்கரை பகுதியில் இருக்கும் பொது மக்களிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்
வெள்ளி 22, ஜனவரி 2021 5:38:54 PM (IST)

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்
வெள்ளி 22, ஜனவரி 2021 4:25:03 PM (IST)

குடியரசு நாள் விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:19:19 PM (IST)

முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7.5 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை
வெள்ளி 22, ஜனவரி 2021 12:40:50 PM (IST)

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:37:26 PM (IST)

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:33:11 PM (IST)
