» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக் மீது அரசு பஸ் மோதல் ஆசிரியர் பரிதாப சாவு : மகள் படுகாயம்
வியாழன் 26, நவம்பர் 2020 7:53:38 PM (IST)
வாசுதேவநல்லூர்அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில் ஆசிரியர் பரிதாபமாக இறந்தார். அவரது மகள் படுகாயமடைந்தார்.
தென்காசி மாவட்டம் ராயரிரி காந்தி தெருவைச் சேர்ந்தவர் கனியப்பன் மகன் ஆபிரகாம் செல்வராஜ் (55). இவர் ராயகிரி சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஆபிரகாம் செல்வராஜ் வாசுதேவநல்லூரில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பைக்கில் தனது மகள்ஆக்சிலிய வைஸ்டிலின் (9) உடன் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். பைக் அருளாச்சி ஒத்தக்கடை விலக்கில் திரும்பியபோது அவ்வழியே தென்காசியில் இருந்து மதுரைக்கு சென்ற அரசு பஸ் திடீரென பைக்மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆபிரகாம் செல்வராஜ் மற்றும் அவரது மகள் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ஆபிரகாம் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். ஆக்சிலிய வைஸ்டிலினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் அந்தோணி, உதவி ஆய்வாளர் சண்முகவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் அலங்காநல்லூர் குறவன் குளம் நடுத்தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் திருஞானம் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்
வெள்ளி 22, ஜனவரி 2021 5:38:54 PM (IST)

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்
வெள்ளி 22, ஜனவரி 2021 4:25:03 PM (IST)

குடியரசு நாள் விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:19:19 PM (IST)

முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7.5 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை
வெள்ளி 22, ஜனவரி 2021 12:40:50 PM (IST)

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:37:26 PM (IST)

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:33:11 PM (IST)
