» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்: தமிழக முதல்வர் அறிவிப்பு
வெள்ளி 3, ஜூலை 2020 4:21:51 PM (IST)
தமிழகத்தில் ஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தறபோது ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அசிரி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 3 மாதங்களில் வழகிய அசிரி அளவின்படி, கூடுதல் அரிசியுடன் நியாய விலைக்கடைகளில், விலையின்றி வழங்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
வருகின்ற 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். பொருட்கள் வழங்கப்படும் நாள், மற்றும் நேரம் குறிப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலைக்கடைகளுக்கு 10.07.2020 முதல் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 28-ம் தேதி தைப்பூச தேரோட்டம்
ஞாயிறு 24, ஜனவரி 2021 9:22:08 AM (IST)

தமிழகத்தில் தூய அரசியலை உருவாக்குவோம்: நெல்லையில் சீமான் பேட்டி
ஞாயிறு 24, ஜனவரி 2021 9:15:03 AM (IST)

தமிழ்நாட்டிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது : கோவையில் ராகுல் பேச்சு!!
சனி 23, ஜனவரி 2021 4:37:31 PM (IST)

வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஆட்சியர், ஆணையர் பங்கேற்பு
சனி 23, ஜனவரி 2021 3:55:00 PM (IST)

சென்னை வெளிவட்டச் சாலையின் 2ஆம் பகுதியை உடனடியாக திறக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
சனி 23, ஜனவரி 2021 12:22:53 PM (IST)

முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்: 12 கிலோ நகை, பணம் மீட்பு
சனி 23, ஜனவரி 2021 11:17:29 AM (IST)
