» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அதிமுக அரசு மறைமுக திட்டம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
வெள்ளி 29, நவம்பர் 2019 3:33:02 PM (IST)
அ.தி.மு.க. அரசுதான் மறைமுகமாக உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திட்டமிட்டு உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வார்டு வரையறை இதுவரை செய்யப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படவில்லை. பட்டியல் இனத்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கான வார்டுகள் வரையறை செய்யப்படவில்லை. மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என்று முன்பு கூறினார்கள். இப்போது மறைமுக தேர்தல் என்று அவசர சட்டம் பிறப்பித்து இருக்கிறார்கள்.
இப்படி உள்ளாட்சி தேர்தலுக்கு எந்த வகையிலும் அரசு சட்டப்படி தயாராகவில்லை. யாராவது கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடர்வார்கள். அதை காரணமாக வைத்து உள்ளாட்சி தேர்தலை நிறுத்திவிடலாம் என்று இந்த அரசு சதிசெய்து வருகிறது. ஆனால் தி.மு.க. மீது பழி போட்டு தப்பிக்க முயற்சி செய்கிறது. தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார். அ.தி.மு.க. அரசுதான் மறைமுகமாக இந்த தேர்தலை நிறுத்த திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 28-ம் தேதி தைப்பூச திருவிழா தேரோட்டம்
ஞாயிறு 24, ஜனவரி 2021 9:22:08 AM (IST)

தமிழகத்தில் தூய அரசியலை உருவாக்குவோம்: நெல்லையில் சீமான் பேட்டி
ஞாயிறு 24, ஜனவரி 2021 9:15:03 AM (IST)

தமிழ்நாட்டிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது : கோவையில் ராகுல் பேச்சு!!
சனி 23, ஜனவரி 2021 4:37:31 PM (IST)

வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஆட்சியர், ஆணையர் பங்கேற்பு
சனி 23, ஜனவரி 2021 3:55:00 PM (IST)

சென்னை வெளிவட்டச் சாலையின் 2ஆம் பகுதியை உடனடியாக திறக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
சனி 23, ஜனவரி 2021 12:22:53 PM (IST)

முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்: 12 கிலோ நகை, பணம் மீட்பு
சனி 23, ஜனவரி 2021 11:17:29 AM (IST)
