» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா
வெள்ளி 29, நவம்பர் 2019 10:03:07 AM (IST)

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று மருத்துவமனையின் கலையரங்கத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாரின் அரவணைப்பில் அமைந்துள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மேல்மருவத்தூரில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாக இலவசமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. உயிர்காக்கும் அனைத்து விதமான சிகிச்சைகளும் சிறப்பு வாய்ந்த மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆதிபராசக்தி மருத்துவமனையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று மருத்துவமனையின் கலையரங்கத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மருத்துவமனையின் துணை தலைவர் லக்ஷ்மி பங்காரு அடிகளார் தலைமை வகித்தார். மருத்துவ இயக்குனர் டாக்டர் த.ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆதிபராசக்தி குழும பள்ளிகளின் தாளாளர் ஸ்ரீதேவி ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் மருத்துவமனை செவிலியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மருத்துவமனையில் நீண்ட நாட்கள் பணியாற்றி கொண்டிருக்கும் ஊழியர்களுடன் மருத்துவமனையின் துணை தலைவர் லக்ஷ்மி பங்காரு அடிகளார் கேக் வெட்டி அவர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார். அதன் பின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ், சிறப்பு விருந்தினர் ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோரின் சிறப்புரையும், துணை தலைவர் லக்ஷ்மி பங்காரு அடிகளார் தலைமையுரையும் ஆற்றினார்.

இவ்விழாவின் மருத்துவமனையின் ஓராண்டு சாதனையை விளக்கும் ஒலி ஒளி விளக்கப்படம் திரையிடப்பட்டது. மேலும் மருத்துவமனைக்காக வலைதளமும் தொடங்கி வைக்கப்பட்டது. புதிய தலைமை நிர்வாக இயக்குனர் சேகர்-ஐ டாக்டர் ரமேஷ் அறிமுகபடுத்தினார். மருத்துவமனையின் செயல் திட்டமும், தொலைநோக்கு பார்வையும் குறித்த வரையறைகளும் வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை மனிதவள அதிகாரி ஸ்ரீநிவாசன், முதன்மை வளாக மற்றும் பாதுகாப்பு மேலாண்மை அதிகாரி சந்திரசேகர் குழுவினர் மிக சிறப்பாக செய்திருந்தார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 28-ம் தேதி தைப்பூச திருவிழா தேரோட்டம்
ஞாயிறு 24, ஜனவரி 2021 9:22:08 AM (IST)

தமிழகத்தில் தூய அரசியலை உருவாக்குவோம்: நெல்லையில் சீமான் பேட்டி
ஞாயிறு 24, ஜனவரி 2021 9:15:03 AM (IST)

தமிழ்நாட்டிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது : கோவையில் ராகுல் பேச்சு!!
சனி 23, ஜனவரி 2021 4:37:31 PM (IST)

வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: ஆட்சியர், ஆணையர் பங்கேற்பு
சனி 23, ஜனவரி 2021 3:55:00 PM (IST)

சென்னை வெளிவட்டச் சாலையின் 2ஆம் பகுதியை உடனடியாக திறக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
சனி 23, ஜனவரி 2021 12:22:53 PM (IST)

முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்: 12 கிலோ நகை, பணம் மீட்பு
சனி 23, ஜனவரி 2021 11:17:29 AM (IST)
