» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிராமணர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வசனங்கள்: நடிகர் சந்தானம் மீது பழநி டி.எஸ்.பி.யிடம் புகார்
வெள்ளி 19, ஜூலை 2019 3:32:38 PM (IST)
சந்தானம் நடித்துள்ள ஏ 1 படத்தின் டீசரில் பிராமணர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வசனங்கள் உள்ளதாக பழநி டி.எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து தமிழர் கட்சி மாநிலத் தலைவர் ராம.ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியினர் டி.எஸ்.பி.யிடம் மனு அளித்தனர். இது குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து, இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமார் ஆகியோர் கூறியதாவது: நடிகர் சந்தானம் நடித்து வெளியாக வுள்ள ஏ1 படத்தின் டீசரில் பிராமணர் சமூகம் பற்றியும், பிராமணப் பெண்கள் பற்றியும் அவதூறான வசனம் இடம் பெற்றுள்ளது. சர்சைக்குரிய வசனங்களை உடனே நீக்க வேண்டும்.தமிழ்நாடு திரைப்பட தணிக்கைக் குழு மறு தணிக்கை செய்யவேண்டும். நடிகர் சந்தானம் உள்ளிட்ட படக் குழுவினர் மீதான புகாரை ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலர், காவல் துறை டி.ஜி.பி. ஆகியோருக்கு அனுப்ப உள்ளோம் என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்
வெள்ளி 22, ஜனவரி 2021 5:38:54 PM (IST)

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்
வெள்ளி 22, ஜனவரி 2021 4:25:03 PM (IST)

குடியரசு நாள் விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:19:19 PM (IST)

முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7.5 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை
வெள்ளி 22, ஜனவரி 2021 12:40:50 PM (IST)

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:37:26 PM (IST)

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:33:11 PM (IST)
