» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி திமுக பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை: பாஜக கோரிக்கை!
புதன் 9, ஏப்ரல் 2025 8:36:13 PM (IST)

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக திமுக பெண் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தலைமையில், ஓபிசி அணி துணை தலைவர் விவேகம் ரமேஷ் முன்னிலையில் நிர்வாகிகள் டவுன் ஏஎஸ்பி மதனிடம் அளித்த மனுவில் "தூத்துக்குடி மாநகராட்சி 26-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மரிய கீதா என்பவரின் மகன் ஜெர்சன் கஞ்சா வைத்திருந்ததாக மட்டக்கடை பகுதியில் வைத்து தனிப்படை காவல்துறையினரால் நேற்று இரவு கஞ்சா மற்றும் ஆயுதங்களுடனும், இருசக்கர வாகனத்துடனும் பிடிக்கப்பட்டு, வடபாகம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபரம் அறிந்து அவருடைய தாயாரான மரிய கீதா தன்னுடைய ஆதரவானவர்களுடன் கூட்டமாக வந்து தன்னுடைய மகனை உடனே விடுதலை செய்ய வேண்டுமென பிரச்சனைகள் செய்ததோடு, அங்கிருந்த காவல்துறை வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளார். இது சம்பந்தமாக வடபாகம் காவல்நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை உடனே ஆய்வு செய்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மரிய கீதா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
பிரபுApr 9, 2025 - 09:57:36 PM | Posted IP 172.7*****
இதே சம்பவம் பாஜக ஆளும் மாநிலங்களில் எங்கு நடந்தாலும் அந்த பாஜக நபரை கைது செய்ய விடமாட்டார்கள் திராவிட மாடல் ஆட்சி என்பதால் மட்டுமே உடனே கைது நடவடிக்கை சட்டப்படி நடைபெற்றிருக்கிறது தவறு செய்பவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே திராவிட நாயகன் திரு மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவு
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











VIJAY VIJAYApr 10, 2025 - 11:36:58 AM | Posted IP 104.2*****