» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தொல்லியல் அகழாய்வு முறைகள் பயிற்சிப் பட்டறை

புதன் 9, ஏப்ரல் 2025 8:08:03 PM (IST)



தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் "தொல்லியல் அகழாய்வு முறைகள்" என்ற ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய "தொல்லியல் அகழாய்வு முறைகள்" என்ற தலைப்பிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் புதிய கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் ச.மல்லிகா வரவேற்புரை நல்கினார். கல்லூரி முதல்வர் க.சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். 

வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ச.பாபு நோக்கவுரை வழங்கினார். இப்பயிற்சிப் பட்டறையின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அலுவலர் பா.ஆசைத்தம்பி மாணவர்களுக்கு அகழாய்வு முறைகள் குறித்த செய்முறைப் பயிற்சியினை வழங்கினார். இந்நிகழ்வில் 100 மாணவர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்விற்கு வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் கு.இராஜதுரை மற்றும் உயிரறிவியல் துறை பேராசிரியர் ரா.ரூபினா தனசுதா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இறுதியில் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரிதமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் செ.சிவகாமி சுந்தரி நன்றியுரை கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory