» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 10:57:31 AM (IST)

தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார்.  

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு இசக்கி அம்மன் கோவில் அருகே ஒரு 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரோட்டை கடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த வரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory