» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 2பேர் கைது!

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 10:52:26 AM (IST)

தூத்துக்குடியில் எம்ஜிஆர் பூங்கா அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2பேரை போலீசார் கைது செய்தனர்.  

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் பாளை., ரோடு எம்ஜிஆர் பூங்கா அருகே ரோந்து சென்றபோது கையில் மஞ்சப்பை உடன் நின்று கொண்டிருந்த 2பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த வடிவராஜ் மகன் சத்யராஜ் (25), போல்டன் புரத்தைச் சேர்ந்த ஜேசு பிரகாஷ் மகன் நாதன் என்ற செஞ்சிநாதன் (19) என்பதும் சட்ட விரோதமாக கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory