» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:24:03 AM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நேற்று மாசித்திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில், 9-வது கோவிலான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில், கடந்த 9-ந் தேதி மாசித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டு வந்தது. தினமும் காலை, மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 13-ந் தேதி கருட சேவை நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு விஸ்வரூபம், காலை 5.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 6 மணிக்கு தீர்த்த விநியோகம், கோஷ்டி நடைபெற்றன. காலை 7.45 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் திருத்தேரில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு தேரை பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து தேர் நிலையம் வந்தடைந்தது.
பத்தாம் திருவிழாவான இன்று(செவ்வாய்க்கிழமை) இரவில் பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை(புதன்கிழமை) இரவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். வருகிற 20-ந்தேதி மாசி தீர்த்தவாரி நடைபெருகிறது.
விழாவின் நிறைவு நாளான வருகிற 21-ந் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளி திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு பல்லக்கில் ஆழ்வார்திருநகரி எழுந்தருளுகிறார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓடும் பஸ்சில் பிக் பாக்கெட்: 2 பெண்கள் கைது
சனி 15, மார்ச் 2025 8:17:29 PM (IST)

நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டம் : தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது
சனி 15, மார்ச் 2025 8:12:56 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட அரசாணை : எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த கோரிக்கை!!
சனி 15, மார்ச் 2025 7:55:53 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் வாழ்த்து
சனி 15, மார்ச் 2025 7:50:21 PM (IST)

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
சனி 15, மார்ச் 2025 4:23:44 PM (IST)

தூத்துக்குடி சிக்னல் பகுதியில் மேற்கூரை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 15, மார்ச் 2025 4:16:33 PM (IST)
