» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஒருவர் வெட்டிக் கொலை: பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்!

சனி 15, பிப்ரவரி 2025 8:15:38 AM (IST)

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக தொழிலாளி ஒருவர், பக்கத்து வீட்டுக்காரரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி முத்தையாபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் ராஜா (45). கூலித் தொழிலாளி. இவருக்கும் எதிர்வீட்டில் வசிக்கும் சுரேஷ்(40) என்பவருக்கும் பொது குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், நேற்று இரவு இவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜாவை விட்டுவிட்டு தப்பினாராம். இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 

இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம்  காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து, சுரேஷை தேடி வருகின்றனா். சம்பவ இடத்தை தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் பார்வையிட்டார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors


CSC Computer Education




Thoothukudi Business Directory