» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

ஞாயிறு 9, பிப்ரவரி 2025 12:01:15 PM (IST)



தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள்  நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினசரி 272 விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று வருகிறார்கள் இவர்கள் சுழற்சி முறையில் தினசரி 135 விசை படகுகளில்கடலுக்குள் சென்று வருகிறார்கள் இதற்கிடையே நாளை 10ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தை மீனவர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. 

அதில், "விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நியாயமான மாற்று தொழில் முறையை அனுமதி பெற்று தராத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும் முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் தலைமையின் கீழே இயங்கி வந்த வருவாய்த்துறை காவல்துறை மெயின் துறை குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு மாற்று தொழிலுக்கான உத்தரவை வழங்காததை கண்டித்தும் பிப்.10 திங்கள் கிழமை முதல் விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் மேலும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் சுமார் 5ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து

உங்களால்Feb 9, 2025 - 02:14:38 PM | Posted IP 162.1*****

தான் மீன்கள் இனம் அழிந்து வருகிறது , பவளைப்பாறைகள் காணாமல் போய்விட்டது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education


New Shape Tailors





Thoothukudi Business Directory