» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீன்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

ஞாயிறு 9, பிப்ரவரி 2025 9:42:10 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவா்கள் நேற்று கரை திரும்பினா். இதையடுத்து, மீன்களை வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்கள் வரத்து அதிகரிப்பு, தைப்பூசம் ஆகியவை காரணமாக விலை குறைந்து காணப்பட்டது.

சீலா மீன் ஒரு கிலோ ரூ. 700, விளை மீன், ஊளி, பாறை ஆகியவை தலா ரூ. 400, தோல்பாறை ரூ. 200, சூரை மீன் ரூ. 180 என விற்பனையாகின. ஏற்றுமதி ரகங்களான தம்பா, பண்டாரி உள்ளிட்ட மீன்கள் ரூ. 300-க்கு விற்பனையாகின. விலை குறைந்திருந்ததால் பொதுமக்கள் ஆா்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education


New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory