» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
ஞாயிறு 9, பிப்ரவரி 2025 9:42:10 AM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவா்கள் நேற்று கரை திரும்பினா். இதையடுத்து, மீன்களை வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்கள் வரத்து அதிகரிப்பு, தைப்பூசம் ஆகியவை காரணமாக விலை குறைந்து காணப்பட்டது.
சீலா மீன் ஒரு கிலோ ரூ. 700, விளை மீன், ஊளி, பாறை ஆகியவை தலா ரூ. 400, தோல்பாறை ரூ. 200, சூரை மீன் ரூ. 180 என விற்பனையாகின. ஏற்றுமதி ரகங்களான தம்பா, பண்டாரி உள்ளிட்ட மீன்கள் ரூ. 300-க்கு விற்பனையாகின. விலை குறைந்திருந்ததால் பொதுமக்கள் ஆா்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக் கூட்டம்: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
வெள்ளி 14, மார்ச் 2025 8:13:10 AM (IST)

முன் விரோதத்தில் தாக்கிய வழக்கில் 6 பேர் கைது: தவறி விழுந்ததில் 2 பேருக்கு கை எலும்பு முறிவு
வியாழன் 13, மார்ச் 2025 9:50:47 PM (IST)

நுண் உர செயலாக்க மையங்களில் மேயர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 9:43:29 PM (IST)

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் மார்ச் 20 முதல் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:36:12 PM (IST)

போதையில்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்
வியாழன் 13, மார்ச் 2025 8:15:38 PM (IST)

நில ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் : விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:11:28 PM (IST)
