» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாரி மோதியதில் மாநகராட்சி அறிவிப்பு பலகை சேதம்
திங்கள் 28, அக்டோபர் 2024 8:00:08 AM (IST)
தூத்துக்குடியில் லாரி மோதியதில், ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்த மாநகராட்சி அறிவிப்பு பலகை உடைந்து சேதமடைந்தது.
திருநெல்வேலியில் இருந்து கற்கள் ஏற்றிச் சென்ற லாரி, துறைமுகத்தில் இறக்கிவிட்டு, மீண்டும் திருநெல்வேலிக்கு நேற்று சென்று கொண்டிருந்ததாம். இந்த லாரி, துறைமுகச் சாலையில் இருந்து பாளையங்கோட்டை சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கம் மேலே தூக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையில் இருந்த மாநகராட்சி அறிவிப்பு பலகையில் லாரியின் பின்பக்கம் மோதியதில், அது சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர் விரைந்து சென்று உடைந்த அறிவிப்பு பலகையை அகற்றினர்.