» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீசாருக்கு மிரட்டல் விடுத்த ரவுடி கைது : மான் கொம்பு பறிமுதல்

திங்கள் 28, அக்டோபர் 2024 7:56:34 AM (IST)

கோவில்பட்டியில் போலீசாருக்கு மிரட்டல் விடுத்து, மான் கொம்பால் குத்த முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் மந்திதோப்பு இந்திரா காலனி பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் வசித்துவரும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூக்கையா மகன் அலெக்ஸ் பாண்டியன் (32) போலீசாரை அவதூறாகப் பேசி பணிசெய்ய விடாமல் தடுத்ததுடன், கையில் வைத்திருந்த மான் கொம்பால் குத்த முயன்றாராம்.

சுதாரித்துக்கொண்ட போலீசார், அலெக்ஸ் பாண்டியனை மான் கொம்புடன் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, மான் கொம்பைப் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory