» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஹிந்தி பிரசாரர்கள் மாநாடு
ஞாயிறு 27, அக்டோபர் 2024 6:27:39 PM (IST)
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா (த) சார்பாக தென்மண்டல ஹிந்தி பிரசாரர்கள் மாநாடு இன்று நடைபெற்றது.
விழாவில் தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா (த) தலைவர் சொக்கலிங்கம் முன்னிலையில் மாநாட்டை ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி செயலர் சொ.சுப்புலட்சுமி மற்றும் பிரசாரர்கள், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா (த) இரண்டாம் உப தலைவர் P.சுப்பிரமணியம் வரவேற்புரை வழங்கினார்.
வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு தலைமையுரை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் சந்திரசேகர் சிறப்புரையாற்றினார்கள். செயலர் பொறுப்பு அரவிந்தநாயகி நன்றியுரை நல்கினார். இந்நிகழ்ச்சியில் தென்மண்டலத்தைச் சார்ந்த ஹிந்தி பிரசாரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.