» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஹிந்தி பிரசாரர்கள் மாநாடு

ஞாயிறு 27, அக்டோபர் 2024 6:27:39 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா (த) சார்பாக தென்மண்டல ஹிந்தி பிரசாரர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. 

விழாவில் தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா (த)  தலைவர் சொக்கலிங்கம் முன்னிலையில் மாநாட்டை ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி செயலர் சொ.சுப்புலட்சுமி  மற்றும் பிரசாரர்கள், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா (த)  இரண்டாம் உப தலைவர் P.சுப்பிரமணியம் வரவேற்புரை வழங்கினார். 

வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு தலைமையுரை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் சந்திரசேகர் சிறப்புரையாற்றினார்கள்.  செயலர் பொறுப்பு அரவிந்தநாயகி நன்றியுரை நல்கினார். இந்நிகழ்ச்சியில் தென்மண்டலத்தைச் சார்ந்த ஹிந்தி பிரசாரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors






Thoothukudi Business Directory