» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவி : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்!
ஞாயிறு 27, அக்டோபர் 2024 11:44:29 AM (IST)
தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி மூன்றாவது வார்டுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி ஏற்பாட்டில் தீபாவளியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, வட்ட செயலாளர் தெய்வேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.