» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் உண்டியல் காணிக்கை ரூ.3.62 கோடி : ஒரு கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி கிடைத்தன!

ஞாயிறு 27, அக்டோபர் 2024 9:15:12 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.3.62 கோடி செலுத்தி இருந்தனர். மேலும். ஒரு கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்களும் காணிக்கையாக கிடைத்தன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வசந்த மண்டபத்தில் கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் 2 நாட்கள் நடந்தது.  தாங்கினார்.

இதில் மொத்தம் ரூ.3 கோடியே 62 லட்சத்து 18 ஆயிரத்து 791-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் ஒரு கிலோ 55 கிராமும், வெள்ளி பொருட்கள் 20 கிலோ 336 கிராமும், வெளிநாட்டு பண நோட்டுகள் 675-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

காணிக்கை எண்ணும் பணியில் சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப் பணிக்குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory