» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மரக்கடை குடோனில் தீ விபத்து: ரூ.12 கோடி மதிப்புள்ள கட்டைகள் எரிந்து சேதம்!

சனி 26, அக்டோபர் 2024 12:55:37 PM (IST)



திருச்செந்தூர் அருகே மரக்கடை குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள மரக்கட்டைகள் எரிந்து சாம்பலானது. 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள வாத்தியார் குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ் (45). இவருக்கு திருச்செந்தூர்-காயல்பட்டினம் சாலையில் வீரபாண்டியன்பட்டினம் அருகே மரக்கடை குடோன் உள்ளது. இந்த குடோனில் தேக்கு, வேங்கை, கோங்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் வெட்டி தயார் செய்யப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த குடோனில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் இருந்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அந்த குடோனில் திடீரென தீ பிடித்துள்ளது. குடோனில் யாரும் இல்லாததால், தீ விபத்தை பார்த்த நபர் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் குறித்து திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முடியாமல் திணறினர்.

இதனால் சாத்தான்குளம் தீயணைப்பு துறையினர், டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. மரக்கட்டை என்பதால் தீ கொழுந்துவிட்டு வேகமாக எரிந்தது. சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ஆனால் குடோனில் இருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory