» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி!

சனி 26, அக்டோபர் 2024 11:04:41 AM (IST)

தூத்துக்குடி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கார் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அந்தோணியார் புரம், கால்டுவெல் காலனியைச் சேர்ந்தவர் அசோகன் மகன் அஜித் (30), கார் டிரைவர் ஆன இவர் கடந்த 24 ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை புதிய பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது நெல்லையில் இருந்து தூத்துக்குடி வந்த லாரி கார் மீது மோதியது.

இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து, லாரி டிரைவரான பணகுடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அரிகரன் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors







Thoothukudi Business Directory