» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிய அங்கன்வாடி மையங்கள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

புதன் 9, அக்டோபர் 2024 3:23:13 PM (IST)



தூத்துக்குடியில் 2 புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி 4வது வார்டு அம்பேத்கார் நகர், 47வது வார்டு லயன்ஸ் டவுண் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அமைச்சரை முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்ததை அடுத்து எல்.என்.டி நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம் புதிய அங்கன்வாடி கட்டப்படுகிறது.  இந்நிலையில், அங்கன்வாடி கட்டிட பணிகள் தொடங்குவதற்கான பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின் போது மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்ட செயலாளர்கள் சூசை அந்தோணி, சதீஷ்குமார், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், நாகேஸ்வரி, எல்.என்.டி நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ராஜசேகர், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், தி.மு.க அவை தலைவர் முனியசாமி வட்ட பிரதிநிதி பாஸ்கர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்ணான்டோ, மாவட்ட ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் (பொறுப்பு) காயத்ரி மற்றும் கருணா, மணி, அல்பர்ட் உட்பட பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education

New Shape Tailors






Thoothukudi Business Directory