» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்த மாணவி திடீர்சாவு

சனி 27, ஜூலை 2024 6:48:51 PM (IST)

தூத்துக்குடியில் மகளிர் விடுதியில் தங்கி படித்த மாணவி மர்மமான முறையில் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக் நகரில் வசிப்பவர் அண்ணாதுரை இவரது மகள் ஸ்ரீதேவி (வயது 22). இவர் தூத்துக்குடியில் உள்ள சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகடாமியில் பேங்க் வேலைக்காக படித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மேலூர் பங்களா தெருவில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி உள்ளார். இன்று மதியம் சாப்பிட்டு விட்டு இரண்டு மணிக்கு மேல் கட்டிலில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது திடீரென மயங்கி விழுந்தாராம். உடனே அவருடன் இருந்த சக மாணவிகள் விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ஸ்ரீதேவியை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ராஜாராம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த மாணவி ஸ்ரீதேவி கடந்த இரண்டு தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அவர் எப்படி இறந்தார்? வேறு ஏதும் காரணம் உள்ளதா? அவர் விஷ மருந்து ஏதும் குடித்து உள்ளாரா? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது சம்பந்தமாக ஸ்ரீதேவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory