» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடு புகுந்து 45 பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது!

சனி 27, ஜூலை 2024 5:59:57 PM (IST)



தூத்துக்குடியில் வீடு புகுந்து  45 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்து, தங்க நகைகளை மீட்டனர். 

தூத்துக்குடி வானியன்விளை பகுதியைச் சேர்ந்த முத்துவீரன் மகன் காந்தி (64) என்பவர் கடந்த 20.07.2024 அன்று பக்கத்து தெருவில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்று தங்கி விட்டு மறுநாள் (21.07.2024) காலையில் வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 50 சவரன் நகை, கைக்கடிகாரம் மற்றும் ரூபாய் 55,000/- பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து காந்தி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)  ஆதாம் அலி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள்  சிவக்குமார் மற்றும்  மாரிமுத்து, தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர்  மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்  செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர்  சாமுவேல், காவலர்   முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர்  திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் ஏ.சண்முகபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் சேர்மப்பாண்டி (32)  என்பவர் காந்தியின் வீட்டிற்கு புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உடனடியாக சேர்மபாண்டியை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 45 சவரன் தங்க நகைகள், கை கடிகாரம் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி வீடு புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிய எதிரியை கைது செய்து, தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  வெகுவாக பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory