» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஸ் நிலையம் அருகே ஆபத்தான சாலை : வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!

வெள்ளி 26, ஜூலை 2024 5:29:03 PM (IST)



தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் அருகே பள்ளமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே மீனாட்சிபுரத்தில் பிரதான சாலை சேதமடைந்து பள்ளமாக உள்ளது. இந்த சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த சாலையில் எதிரே பேருந்து வரும் சமயங்களில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் எதுவும நடைபெறும் முன்பாக சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

என்ன டா இதுJul 27, 2024 - 09:10:12 PM | Posted IP 162.1*****

பக்கத்துல மாநகராட்சி ஆபீஸ் இருக்கு , ஏம்பா அதையும் கண்டுக்க மாட்டிக்காங்க . எல்லாம் துட்டு பயலுக

RasukanuJul 26, 2024 - 10:01:28 PM | Posted IP 172.7*****

3 mail irunthu , polytechnic college. Rode. Sariyaga ella. Athaiyum sari seiyumaru kettukiroom

KumarJul 26, 2024 - 05:56:10 PM | Posted IP 162.1*****

மாதாகோவில் திரு விழா ஆரம்பமாகிவிட்டது ஆனால் ஜார்ஜ் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory