» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வெள்ளி 26, ஜூலை 2024 12:01:11 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் முகம்மது கருன் மனைவி கும்ரோனிஷா (63). இவர் கடந்த 20ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மருத்துவ சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளார். கடந்த 24ஆம் தேதி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்கச் செயின் திருடுபோயிருந்தது. இதுகுறித்து அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






New Shape Tailors



Thoothukudi Business Directory