» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கார் டிரைவருக்கு கத்திக்குத்து : 2பேர் கைது!

வெள்ளி 26, ஜூலை 2024 11:52:18 AM (IST)

தூத்துக்குடியில் முன் விரோதத்தில் கார் டிரைவரை கத்தியால் குத்திய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் சக்திவேல் (36). தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் மாரியப்பன் (46). கார் டிரைவர். இந்நிலையில்,  சக்திவேல் தனது காரை மாரியப்பனிடம் அடகு வைத்து ரூ.1.5லட்சம் பணம் வாங்கினாராம். 

6 மாதங்களுக்கு பின்னர் பணத்தை கொடுத்துவிட்டு காரை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் காரை திருப்பி தரவில்லையாம். இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பரான சில்வர்புரம் செல்வராஜ் மகன் சுப்புராஜ் (35) ஆகிய 2பேரும் சேர்ந்து நேற்று பைக்கில் வந்து கொண்டிருந்த மாரியப்பனை வழிமறித்து தாக்கி கத்தியால் குத்தினார்களாம். 

இதில் காயம் அடைந்த மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) வனசுந்தர் கொலை முயற்சி வழக்குப் பதிந்து சக்திவேல் மற்றும் சுப்புராஜ் ஆகிய 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory