» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பனிமய மாதா பேராலய திருவிழா கொடி பவனி
வியாழன் 25, ஜூலை 2024 8:50:45 PM (IST)
தூத்துக்குடியில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் சிறப்பு திருப்பலிக்கு பின்னர் மாதா உருவம் பொறித்த கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
தூத்துக்குடியில் உலக புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 442 ஆம் ஆண்டு திருவிழா நாளை ஜூலை 26 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதையொட்டி பனிமய மாதா பேராலயத்தில் இன்று மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நாளை திருவிழா துவங்குவதை முன்னிட்டு கொடிமரத்தில் ஏற்றப்படும் மாதா உருவம் பொறித்த கொடி மற்றும் காணிக்கை பொருட்கள் ஆலய வளாகத்தில் இருந்து பங்கு தந்தை ஸ்டார்வின் தலைமையில் ஊர்வலமாக நான்கு வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு பின்பு ஆலயம் வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மாதாவின் பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.
நாளை ஜூலை 26 ஆம் தேதி காலை எட்டு மணி முதல் 9:00 மணிக்குள் கொடி மரத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடி ஏற்றப்பட்டு திருவிழா துவங்கி 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.