» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : அமைச்சர்கீதாஜீவன் அறிவிப்பு

வியாழன் 25, ஜூலை 2024 5:10:44 PM (IST)

மத்திய பட்ஜெட் அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் ஜீலை 27-ல் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்பி தலைமையில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று வடக்கு மாவட்ட செயலாளா் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளா்ச்சியை உருவாக்கிட உதவிட வேண்டும். ஆனால் ஒன்றிய பா.ஜ.க. அரசு சமா்ப்பித்துள்ள மத்திய பட்ஜெட் தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் தாராளமாக அள்ளிக் கொடுத்தும், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் நிதி ஒதுக்காமல் இருப்பதும் ஏமாற்றம் அளிக்கிறது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து 27.07.2024 சனிக்கிழமை மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்திட வேண்டும் என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தி.மு.க. தலைமைக் கழகத்தின் அறிவிப்புக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 27.07.2024 சனிகிழமை காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி பாளை ரோடு - சிதம்பர நகா் பேரூந்து நிறுத்தம் எதிரில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமிகு. கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற இருக்கிறது.

மாவட்ட கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினா்கள் கழக முண்ணனியினா் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆா்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா், கிளைக் கழகச் செயலாளா்கள், நிர்வாகிகள் அனைத்து கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கழகத் தோழா்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திராளாகக் கலந்து கொண்டு ஆா்பாட்டத்தை வெற்றியடையச் செய்திட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

Yarai ematraJul 26, 2024 - 01:10:52 PM | Posted IP 172.7*****

ippadiye makkalai evvalavunal ematruveergal?

கு வெங்கடேசன்Jul 26, 2024 - 07:58:09 AM | Posted IP 172.7*****

மக்கள் தீர்ப்பே நீதிமன்றம் எனவே நாம் நமது உரிமையை மத்திய அரசிடம் கேட்பது நமது கடமை யாகும் தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் செய்யவேண்டும் வந்தேமாதரம் தமிழ் வாழ்க தமிழக மக்கள் வாழ்க

publicJul 25, 2024 - 05:28:16 PM | Posted IP 172.7*****

what is the use , wasting time to read this news

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory