» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய பாஜக அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

வியாழன் 25, ஜூலை 2024 10:02:43 AM (IST)



மத்திய பாஜக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பெரும்பான்மை இல்லாத பாஜக புதிய தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை மத்திய அரசின் பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி அண்ணாநகரில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் ஏஐடியுசி சார்பில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ், சிஐடியு சார்பில் மாநில செயலாளர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, ஐஎன்டியுசி சார்பில் கதிர்வேல் ராஜ் சுடலை பாலகிருஷ்ணன், எல்பிஎஃப் சார்பில் மாவட்ட கவுன்சில் தலைவர் சுசி ரவீந்திரன், சந்திரசேகர், ஹஎச்எம்எஸ் துறைமுகம் சத்யா, கவுன்சி தலைவர் ராஜ்குமார், உழைப்பாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜலட்சுமி, ஏஐசிசிடியு சார்பில் சிவராமன் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

உழைப்பாளர்Jul 25, 2024 - 02:17:58 PM | Posted IP 162.1*****

நீங்கள் எல்லாம் எங்கு இருக்கிறீர்கள் ? மழை வெள்ளம் வரும்போது ஒருத்தரும் வரவில்லை, தொழிலாள மக்களுக்கு ஒரு உதவியும் செய்வதில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory